October 7, 2012

உண்மையில்

கடந்து போகும்

மேகங்கள் கூட

மனதை கடத்தி

போக மறுத்து

காயபடுத்தியே போகின்றன. 

கடந்து போகும் மேகங்கள்

நிலையான வானம்

எனக்கு நிறைந்திருப்பினும்


கடந்து போகும்

மேகத்திற்காக  சில

நிமிடம் என் இதயம் 

சிலிர்பதேன்

சிதறும் இன்பம்

நான் சேர்த்து வைத்த

நிணைவுகள் எல்லாம்

சின்னாபின்னமாய் சிதைகிறதே 

தோழி.....


இன்று

சிந்தி சிதறும்

கண்ணீரில் என்

சிற்றின்பமும் கரைகிறதே

தோழி.....


October 6, 2012

சொல்வாயா என் காதலே

உன் கண்ணசைவில்
 
கலைந்து  போன

என் காதல்...............


உன் புன்னகையின்

ஒரு அசைவில்

புதுபித்தது நம்

காதலின் உன்னதமா.

நியாயம்

நிலையில்லாத

என் நினைவுகளை

நிஜமக்கியவள் நீதானே....


இன்று நீயில்லாத

என் வாழ்வினை

நிலையக்குவதன் 

நியாயம் என்னடி???

சிந்திய மழை சிதறிய இதயம்

உன் சிரிப்பதானில்

சிந்திய மழை

என்றல்லவா

சிலிர்த்து கொண்டு

நனைந்திருந்தேன்....



உன் கண்ணீரை

மறைக்கத்தான் மேகமும்

கரைந்தது என்பதறியாமல்.....

உணர்வாய் நீ

மறக்க முடியாத

 தருணங்கள்  மனதில்

தோன்றி  வாழ்வில்

மலரும்  என்றால்

உன்னோடு இருப்பதையும்

உயர்வாய் எண்ணுகிறேன்

நீயும் என் உணர்வேன்றே!!!!!

அடடா

 இனியவளே

யாருக்காகவும் உன்னை

இழக்கமாட்டேன் என்ற

கர்வத்தில் .......


இழந்துவிட்டேனோ  எல்லோரையும்

உன்னால் என்ற

வருத்தம்    இன்று....

July 6, 2012

சிதைக்காதே என்னை

நான் சீரட்று

இருந்த போது

என்னை சிற்பமாக்க

வந்தவள்   ----இன்று

சீராண என்னை

சிதைத்து விட்டு

போகிறாள்     மௌவுனத்தால்

July 3, 2012

உன் உறவின்றி என் உயிரா




உன்னை நீங்கினால் 

எனக்கு உறவு எங்கே

என் உயிர் எங்கே.

இதை

உணர்ந்துகொள்ள முடியாத

உனக்குள்  இனி நான் எங்கே.?

தொலைவில் நீ

உன் தேவைக்காக

 தொலைவில் போகிறாய்

என்றிருந்தேன்.  -----பின்பு

உன் தேவையே

 என்னை தொலைத்து

போவதென்பதை இன்றுணர்ந்தேன்.  

June 29, 2012

உயிரே

என்  தேவைகள்

எல்லாவற்றிலும்  நீ
உனக்கோ  தேவைப்படும்
போது மட்டும்  நான்.

நினைவில் நீ


எப்போதெனும் என்னை

நீ நினைக்கிறாயா ???
                                                  இல்லை

எப்பொழுதுமே என்னால்

நீ நினைக்கபடுகிறாயா….

March 1, 2012

சுமையான சுகம்

அழகாய் அறிவாய்                  அருகே வந்தாய்

கனிவாய் கலையாய் கரங்கள் பிடித்தாய்

உயிராய் உணர்வாய் உள்ளம் படித்தாய்

இதமாய் இயல்பாய் இதயம் தந்தாய்

எளிதாய் என்னை உன்னுள் மறைத்தாய்

எதனால் எதனால்  என்னுள் நுழைந்தாய்
 எதற்காய் இன்று தள்ளி சென்றாய்

சரியோ பிழையோ உன்னிலை அறியேன்
எனினும்

நீ மகிழ்வாய் இருந்தால் மரணத்தை

கூட மடியில் தாலாட்டுவேன்

உன் உறவின் உற்சாகத்தில். 



February 20, 2012

நெருக்கம்


என்னிடத்தில் நெருங்குவதாக


உனக்கு எண்ணமில்லை....

உன்னைவிட்டு விலகிடவே

எனக்கு விருப்பமில்லை...

                                             எனினும்

நெருக்கத்தில் விருப்பமாய்

                                               நான்....

விருப்பத்தில் விலகியிருக்கும்
                                                 நீ.


February 12, 2012

மரணத்தின் பிடியில்

என் இதயமே

உன் பிரிவில்

தவிக்கும் ஒவ்வொரு

நிமிடமும் என்

மரண  யாத்திரைக்கு

ஒத்திகை பார்பதாய்

ஒரு உணர்வு




மலரும் கவிதை

என்னை நீ அழவைக்கும்

நேரம் கூட


ஆனந்தப்பட்டேன் என்


கண்ணீரை நீ

இரசிக்கும் போது

எனக்குள் ரகசியமாய் 

ஒரு கவிதை  

மலர்ந்ததை எண்ணி. 

தோழியே

உன் தாகம் தீர்க்கவே

நான் கடலாய் விரிந்தேன்

நீயோ உன் தாகம் தீர்க்க

முகிலை தான் தேடினாய் 

அதனால் தான் அன்பேஎன் 

அன்பு கடலும் உப்பு கரிக்கிறது.   

வலியில் நான்

உன்விரல் பிடித்து

நடக்க முயன்றேன்

நீயோ உன்உயிர்

கொண்டு என்பாதம்

தாங்குகிறாய் வலிக்கிறது

உன் அன்பில்  

தவிக்கும் என்காதல்.