November 20, 2016

கண்மணி

என்ன சொல்லி உன்னை மீட்பேன்

உண்மை சொல்லியே உறவை உயிர்ப்பேன்

என்னை தந்தும் உன்னை காப்பேன்

ஏற்றுக்கொண்டு கரங்கள் சேர்க்க வருவையா

கண்மணியே 

October 21, 2016

பொறாமை

தோற்றுப்போவதும் சுகமே ...

தோல்வி கூட

என் எதிரி பொறாமை படும்

அளவிற்கு என்றால் 

நான்

நான் ஒவ்வொரு முறையும்
தலைகுனிந்து போவது
என் தவறினால் அல்ல ..


எதற்காகவும் உன்னை
தவறவிடாமல் இருக்கவே....

September 20, 2016

காயம்

வாழ்க்கை

தூரத்தாமலே ஓடுகிறேன் என்பதை

உண்மையான சில உறவுகள்

காயப்படுத்தும் போது

உணர்கிறேன் 

கவிதையின் காதலி

காதல் வந்தால்

கவிதை வரும் என்பார்கள்

ஆனால் நீயோ

என் கவிதையில்

முளைத்த காதல் அல்லவா  

பாசமான காதல்

தேவைகள் உள்ள வரைதான்

உறவின் பாசம்

தேடல்கள் தீரும் வரைதான்

காதலின் நேசம் 

இறைவா

உறவு என்று சொல்ல உன்னையும்

பகை என்று சொல்ல என்னையும் அன்றி

எதுவும் இல்லை என்னிடத்தில்

நடிப்பு

ஒரு முறை நடிக்க பழகியதால் என்னவோ அதுவே வாழ்க்கை ஆகி விட்டது