என் இனியவளே
எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
May 1, 2015
நீ
என் கவிதையின் பொய்மட்டும் அல்ல
என் காதலின் நிஜம் கூட நீ தான்...
என் எண்ணங்களில் மட்டும் அல்ல
என் எல்லாமே நீ தான்...
காத்திருப்பு
நான் காத்திருப்பது
உனக்காக மட்டும் அல்ல...
உன்னோடு வாழ போகும்
நம் வாழ்கைக்காகவும் தான்.....
காதல் வாசம்
வறண்டு போன என் வாழ்வில்
உன் வசந்தங்களை நீ வாரி
இறைக்கும் காலம் என்றடி
சகியே...
உன்
காதல் வாசம் வீசும்
முன்பே கனவில் கல்லறை
வாசம் வீசுதடி
கனவில் சொல்ல மறுத்தாலும்
கல்லறையிலாவது சொல்லிவிடு
உன் காதல் பார்வைகள்
எனக்காக மட்டும் என்று...
உன் பாதையில் என் பயணம்
தனிமை கொஞ்சம் தாக்கினாலும்
உன் நினைவுகள் ஒவ்வொரு
நொடியும் நிழலாய் என்னை
தொடருகிறது...
ஏனோ
என்னை நினைத்து பார்க்க கூட
யோசிக்காத உனக்காய்
நான் நினைவிழப்பது தவறென
தெரிந்தும் தொடர்கிறேன்
உன் பாதையில் என் பயணத்தை
காதல் பார்வைகள்
உன்னழகில் காதல்
வயப்பட்டவர்கள் பலர் ....
உன்னை காதலித்து
ஏமார்ந்தவர்கள் சிலர்....
முடிவாய் நீ கைகோர்த்து
நடக்க ஒருவர்...
இப்படி தொடரும்
உன் பயணத்தில்
மீண்டும் உன் காதல்
பார்வைகளால் என்னை
காயப்படுத்துவதன் காரணம்
என்னவோ கண்ணே
பேரழகு
பெண்களையும் வெக்கபட
வைக்கும் பார்வை...
ஆண்களையும் அடிமையாக்கும் சிரிப்பு.....
உலகை மறந்து
உறைந்து போகவைக்கும் தோற்றம்....
இவள பெண்ணல்ல
எனக்காக இறைவன்
படைத்தனுப்பிய தேவதை
என மெய்சிலிர்க்க வைக்கும்
பேரழகு அல்லவா நீ
அடையாளமாய் நீ
என் வாழ்வில்
மறக்க முடியாத
நினைவுகளை நீ
தரவில்லை என்றாலும்
அழிக்க முடியாத
அடையாளமாய் மாறிவிட்டாய்
பெண்ணே.....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)