என் இனியவளே
எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
October 7, 2012
உண்மையில்
கடந்து போகும்
மேகங்கள் கூட
மனதை கடத்தி
போக மறுத்து
காயபடுத்தியே போகின்றன.
கடந்து போகும் மேகங்கள்
நிலையான வானம்
எனக்கு நிறைந்திருப்பினும்
கடந்து போகும்
மேகத்திற்காக சில
நிமிடம் என் இதயம்
சிலிர்பதேன்
சிதறும் இன்பம்
நான் சேர்த்து வைத்த
நிணைவுகள் எல்லாம்
சின்னாபின்னமாய் சிதைகிறதே
தோழி.....
இன்று
சிந்தி சிதறும்
கண்ணீரில் என்
சிற்றின்பமும் கரைகிறதே
தோழி.....
October 6, 2012
சொல்வாயா என் காதலே
உன் கண்ணசைவில்
கலைந்து போன
என் காதல்...............
உன் புன்னகையின்
ஒரு அசைவில்
புதுபித்தது நம்
காதலின் உன்னதமா.
நியாயம்
நிலையில்லாத
என் நினைவுகளை
நிஜமக்கியவள் நீதானே....
இன்று நீயில்லாத
என் வாழ்வினை
நிலையக்குவதன்
நியாயம் என்னடி???
சிந்திய மழை சிதறிய இதயம்
உன் சிரிப்பதானில்
சிந்திய மழை
என்றல்லவா
சிலிர்த்து கொண்டு
நனைந்திருந்தேன்....
உன் கண்ணீரை
மறைக்கத்தான் மேகமும்
கரைந்தது என்பதறியாமல்.....
உணர்வாய் நீ
மறக்க முடியாத
தருணங்கள் மனதில்
தோன்றி வாழ்வில்
மலரும் என்றால்
உன்னோடு இருப்பதையும்
உயர்வாய் எண்ணுகிறேன்
நீயும் என் உணர்வேன்றே!!!!!
அடடா
இனியவளே
யாருக்காகவும் உன்னை
இழக்கமாட்டேன் என்ற
கர்வத்தில் .......
இழந்துவிட்டேனோ எல்லோரையும்
உன்னால் என்ற
வருத்தம் இன்று....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)