February 20, 2012

நெருக்கம்


என்னிடத்தில் நெருங்குவதாக


உனக்கு எண்ணமில்லை....

உன்னைவிட்டு விலகிடவே

எனக்கு விருப்பமில்லை...

                                             எனினும்

நெருக்கத்தில் விருப்பமாய்

                                               நான்....

விருப்பத்தில் விலகியிருக்கும்
                                                 நீ.


February 12, 2012

மரணத்தின் பிடியில்

என் இதயமே

உன் பிரிவில்

தவிக்கும் ஒவ்வொரு

நிமிடமும் என்

மரண  யாத்திரைக்கு

ஒத்திகை பார்பதாய்

ஒரு உணர்வு




மலரும் கவிதை

என்னை நீ அழவைக்கும்

நேரம் கூட


ஆனந்தப்பட்டேன் என்


கண்ணீரை நீ

இரசிக்கும் போது

எனக்குள் ரகசியமாய் 

ஒரு கவிதை  

மலர்ந்ததை எண்ணி. 

தோழியே

உன் தாகம் தீர்க்கவே

நான் கடலாய் விரிந்தேன்

நீயோ உன் தாகம் தீர்க்க

முகிலை தான் தேடினாய் 

அதனால் தான் அன்பேஎன் 

அன்பு கடலும் உப்பு கரிக்கிறது.   

வலியில் நான்

உன்விரல் பிடித்து

நடக்க முயன்றேன்

நீயோ உன்உயிர்

கொண்டு என்பாதம்

தாங்குகிறாய் வலிக்கிறது

உன் அன்பில்  

தவிக்கும் என்காதல்.