September 20, 2016

காயம்

வாழ்க்கை

தூரத்தாமலே ஓடுகிறேன் என்பதை

உண்மையான சில உறவுகள்

காயப்படுத்தும் போது

உணர்கிறேன் 

கவிதையின் காதலி

காதல் வந்தால்

கவிதை வரும் என்பார்கள்

ஆனால் நீயோ

என் கவிதையில்

முளைத்த காதல் அல்லவா  

பாசமான காதல்

தேவைகள் உள்ள வரைதான்

உறவின் பாசம்

தேடல்கள் தீரும் வரைதான்

காதலின் நேசம் 

இறைவா

உறவு என்று சொல்ல உன்னையும்

பகை என்று சொல்ல என்னையும் அன்றி

எதுவும் இல்லை என்னிடத்தில்

நடிப்பு

ஒரு முறை நடிக்க பழகியதால் என்னவோ அதுவே வாழ்க்கை ஆகி விட்டது