January 17, 2015

உள்மனதில் ஒரு ஆசை

போதும் என்று சொல்ல ஒருநாளும்

கிடைத்ததில்லை எனக்கு

உன்னோடு இருக்கையில்...



இன்று எண்ணுகிறேன்


என்றேனும்

என் நினைவுகள்


உன் மனதில் உதயமானால்

போதும் என்ற வெற்றிடம்

உள்மனதில்.....

காதல் நிமிடங்கள்


மரணத்தின் பிடியில்

மாட்டிக்கொண்டு மறுபடியும்


உயிர்வழ்வேனோ

இல்லை சாவேனோ

என்ற உயிர்பயம் உள்நெஞ்சில்



உன் விழிகள்

என் விழிவருடும்

நிமிடங்கள்

வெளிவேசம்

தனித்திருக்க முடிவு செய்துவிட்டால்

எதற்கிந்த வெளிவேசம்...


காலம் சுமந்து செல்லட்டும்...



நம் உறவுகளை இங்கே

உதறி விட்ட பின்பும்


நினைவுகளையாவது

கல்லறை வரை



 

பொய்யான நிஜம்

எது நிஜம் எது பொய்

நம் அன்பு பொய்

வெறுப்பு நிஜமா?




நம் உறவு பொய்

பிரிவு நிஜமா?


நம் இனிமை பொய்

தனிமை நிஜமா?


விட்டுவிடு பயனில்லை 

இனி எது பேசியும்


 

தேவையில்லை

வெறுப்புகள்  வந்த பின்பு

வீண்பேச்சு தேவையில்லை



நிஜங்கள் தொலைந்த பின்பு

நினைவுகளுக்கு இடமில்லை


சந்தேகங்கள் சேர்ந்த பின்பு

சந்தோஷங்களுக்கு  வழியில்லை


காயங்கள் பட்ட பின்பு

கண்ணீர்சிந்தி பயனில்லை


அன்பானவர்கள் ஏமாற்றிய பின்பு

ஆறுதல்ஏதும் தேவையில்லை