December 13, 2014

நீ மட்டும் இல்லை என்றால்



பொழுது விடிந்த பின்னும்

சற்றே விழிக்க  மறுக்கும்

என் விழிகள்....


உறக்கம் கலைந்த பின்னும்


உன் நினைவு கலையாத

என் ஏக்கங்கள்....


உன் முகம் பார்த்த மகிழ்சியில்

செல்ல சண்டையிட்டு

பின்  உன் கைகோர்க்கும்

என் சந்தோஷங்கள....



இனி என்னவாகுமோ

 நீ மட்டும் இல்லை என்றால் ......

December 1, 2014

கல்லறை வரை

நாம் சந்திக்கும் நாள் 

இன்றே  கடைசி என்கிறாயே...


ஐயோ!!!!!

எப்படி தாங்கி கொள்வேன்

இந்த பிரிவை....


சரி உன் வாழ்வின்

இந்த ஒரு நாளையாவது

எனக்காக தந்து போ

என் கல்லறையில் பொறிக்கட்டும்

நான் வாழ்ந்த நாள்

இன்று மட்டும் என்று ....

ஏன் இந்த மாற்றம்

அன்பே

உன் கைகோர்த்து

நடக்க ஆசை பட்ட போது

தட்டி விட்டு தள்ளி நடந்தாயே....


இன்று    என்ன ஆயிற்று உனக்கு
 
தனியாய் நடக்கும்

என் பயணத்தில் துணையாய்

வர விரும்பிகிறாய்....

November 22, 2014

ஏற்க மறுக்கும் இதயம்

நம்மை நேசிப்பவரை

நாம் புறக்கணிப்பதும்

நாம் நேசிப்பவரால்

புறக்கணிக்க படுவதும்

இயல்பு என தெரிந்தும்

இதயம் ஏற்க

மறப்தென்ன தோழி


நீயும் நானும்

நீயோ

உன் தனிமையில்

மட்டும் என்னை தேடுகிறாய்....


நானோ

நீ தள்ளி நிற்கும்

நிமிடங்களே எனக்கு

தனிமை என்று புலம்புகிறேன்....



எதிர்மறையான நினைவில்


உன் நினைவுகளில் இருந்து

தப்பிக்க நினைப்பதாய்

எண்ணி ஏமாறும்

என் நிமிடங்கள்....


நேர்மறையாய் இல்லாவிட்டாலும்

எதிர்மறையாய்

என் சிந்தனைக்குள் புகுந்து

சிதைக்காதே காதலே...


நகரும் நிமிடங்கள்

மாற்றங்கள் மட்டும் தான்

நானும் மனிதனாய்

வாழ்கிறேன் என்பதை

உணர்த்துகிறது.....


இல்லை என்றால்

நீ தந்த

கண்ணீரும் காயங்களே

என்னை கொன்றிருக்கும்....

October 9, 2014

விழியின் பயணம்

என் கோபத்தின் அன்பையும்

மௌனத்தின் கோபத்தையும்

உணர முடியாத உன்னிடத்தில்

என் காதலின்

கண்ணீரை  காட்டியும் பயனில்லை

என்று தெரிந்தும்

பயணத்தை நிறுத்த மறுக்கிறது

என் விழிகள்..........