என் இனியவளே
எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
September 12, 2013
உன் பிரிவால்
நம்
காதல் நிமிடங்கள்
கண்ணீரில் கரைவதோ....
நீயிருக்கும் இதயம்
நிறம்மாறி போவதோ ???
September 5, 2013
மறக்கமுடியாதவள் நீ
நீ
என்னை நினைப்பதை
நிறுத்திவிட்டாய்.....
நானும்
உன்னை போல
தான் உன்னை
மறக்க முயற்சிப்பதை
நிறுத்திவிட்டேன்...
தேடலில் நான்
நீயும் என்னை
தேடுகிறாய் என்பதை
உன் தேவைகள்
உறுதிபடுத்துகிறது.......
நீ என் தேவையல்ல
நீயே என் தேடல்
என்பதை என்று தான்
உணர்வாய??????
இப்படியும் ஒரு காதல்
என் கவிதைக்கும்
கற்பனைக்கும் மட்டுமின்றி
என் காதலுக்கும்
நீ தகுதி இல்லாதவள்
என்று தெரிந்தும்
கூட மனம்
உன்னையே காதலிக்கிறது ..
August 31, 2013
வேற்றுமை
உனக்கும் எனக்கும்
ஓரே ஒரு
வேற்றுமை தான்
நீ என்னை நினைக்கிறாய்
நான்
உன்னை மட்டுமே நினைக்கிறேன்.
August 25, 2013
தெரியவில்லை
என்ன செய்தாலும்
வெறுக்காமல் பின்
தொடருகிறாய்.....
உன்னை வெறுப்பதாய்
நடிக்கும் என் நாடகம்
உனக்கு எப்படி தான்
தெரிந்து விடுகிறதோ
August 9, 2013
நினைவே
நான் இருக்கும் வரை
உன்னை நேசிப்பேன்.......
மனம் வெறுக்கும் வரை
அல்ல......
June 12, 2013
தேவைகள்
நான் உயிர்வாழ
சில நிமிடம்....
அதில் உன்னோடு
ஒரு நிமிடம்.....
March 23, 2013
பரிமாற்றம்
உயர்ந்தது என்ன????
எடுத்து செல்ல உன்
நினைவை தவிர....
உள்ளது என்ன????
கொடுத்து செல்ல என்
அன்பை தவிர.....
March 3, 2013
என்னவள் நீ
என்று மலரும்
உன் கரம் பிடித்து
என்னை கரைசேர்த்த
அந்த காதல் நன்னாள்..............
அழகே
நம் எண்ணங்கள் வேறு என்றாய்
இருந்தும் என்னவள் நீ என்றேன்
அன்று மலர்ந்த காதல்
இன்றும் உதிராமல் நம்முள்.....
இதமாய் நான்
கனிவாய் பார்த்தாய்
------அன்று
கரைந்து கலந்தவள்
இன்றும்
கரைசேர மனம்
இன்றி உன் நட்பு
கடலில் சிக்கி
தவிக்கிறேன் தோழி
இதமாய் நம்
நினைவிகளை சுமந்து
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)