February 9, 2015

காதல் தொல்லை


நீ நடந்து போகும்

சத்தம் கேட்டு திரும்ப கூடாது

என்று தவிக்கும்

என் இதயத்தை

எப்படியோ தெரிந்துகொண்டு

உன்னை திரும்பி பார்க்க வைத்து

விடுகிறாயே தினமும்...

என்ன செய்வது உன்னை

அழகான ஆர்ப்பாட்டம்


 அழகால் என்னை கொல்ல

ஆர்ப்பாட்டம் செய்கிறது

உன் கண்கள்...


உயிர் பிழைக்க விருப்பமின்றி 

உன் பின்னே நகர்கிறது

என் கனவுகள்....

தள்ளாடும் இதயம்

அழகே

உன்னை போல கண்களின்

வழியே காதலை சொல்ல

எனக்கு தெரியவில்லை....

அதனால் தான்

என் கவிதையினை துதுவிடுகிறேன் ....

உன்னை பார்த்ததும் தள்ளாடும்

என்
இதயம் போல

அதுவும் தடுமாறது

என்ற தைரியத்தில்....

ஏய் பெண்ணே

உன் ஒட்டு மொத்த காதலையும்

ஒன்று சேர்த்து உன் விழி அசைவில்

என்மீது வீசுகிறாய் 

பெண்ணே...


சீராய் துடிக்கும்

என் இதயம் கூட

சில நிமிடம் துடிக்க

மறந்து சிலிர்க்கிறது...  

இனி என்னவாகுமோ என்நிலை....