கனிவாய் கலையாய் கரங்கள் பிடித்தாய்
உயிராய் உணர்வாய் உள்ளம் படித்தாய்
இதமாய் இயல்பாய் இதயம் தந்தாய்
எளிதாய் என்னை உன்னுள் மறைத்தாய்
எதனால் எதனால் என்னுள் நுழைந்தாய்
எதற்காய் இன்று தள்ளி சென்றாய்
சரியோ பிழையோ உன்னிலை அறியேன்
எனினும்
நீ மகிழ்வாய் இருந்தால் மரணத்தை
கூட மடியில் தாலாட்டுவேன்
