January 17, 2015

தேவையில்லை

வெறுப்புகள்  வந்த பின்பு

வீண்பேச்சு தேவையில்லை



நிஜங்கள் தொலைந்த பின்பு

நினைவுகளுக்கு இடமில்லை


சந்தேகங்கள் சேர்ந்த பின்பு

சந்தோஷங்களுக்கு  வழியில்லை


காயங்கள் பட்ட பின்பு

கண்ணீர்சிந்தி பயனில்லை


அன்பானவர்கள் ஏமாற்றிய பின்பு

ஆறுதல்ஏதும் தேவையில்லை






No comments:

Post a Comment