December 13, 2014

நீ மட்டும் இல்லை என்றால்



பொழுது விடிந்த பின்னும்

சற்றே விழிக்க  மறுக்கும்

என் விழிகள்....


உறக்கம் கலைந்த பின்னும்


உன் நினைவு கலையாத

என் ஏக்கங்கள்....


உன் முகம் பார்த்த மகிழ்சியில்

செல்ல சண்டையிட்டு

பின்  உன் கைகோர்க்கும்

என் சந்தோஷங்கள....



இனி என்னவாகுமோ

 நீ மட்டும் இல்லை என்றால் ......

No comments:

Post a Comment