உறைந்து போனதோ இல்லை
உதிர்ந்து போனதோ
உயிரில் கலந்த உறவு.
உண்மையினை அறிய
உள்ளத்தில் துணிவில்லை.
ஏதுவாகிலும் சரி என்று
விலகி நிற்க முடியவில்லை.
உடைந்து போன உறவை
உயிர்ப்பிக்க முயலுகிறேன்.
எல்லாம் மாறும் என்று
துணிகிறேன்
நம் கடந்த கால உறவின்
துணைகொண்டு.
உள்ளம் திறந்து உறவை
ஏற்பாயா உயிரே...?
No comments:
Post a Comment