உன்
சிறு சிறு மாற்றங்களை
ஏற்று கொள்ள
என்மனம் பெரிய
பயணம் செய்கிறது - அப்போது
இந்த மாற்றங்கள்
எல்லாம் கவிதையாகிறது.
அவ்வப்போது இப்படி
காயப்படுத்தி போ
நான் கவிஞனாய்
கரைசேரும் வரை.
எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
உன்
சிறு சிறு மாற்றங்களை
ஏற்று கொள்ள
என்மனம் பெரிய
பயணம் செய்கிறது - அப்போது
இந்த மாற்றங்கள்
எல்லாம் கவிதையாகிறது.
அவ்வப்போது இப்படி
காயப்படுத்தி போ
நான் கவிஞனாய்
கரைசேரும் வரை.
சில நேரங்களில்
எதார்த்தமாய்
சிலரின் வாழ்க்கையில்
எதிர்பாராத மாற்றங்களை
ஏற்படுத்திவிட்டு
எளிதாய் மன்னித்து விடு
என்று சொல்லி
விலகும் போது உணர்வதில்லை
எதார்த்தத்தை சரி செய்ய
எத்தனை வருடங்கள் ஆகும்
என்று....
மேகதூரிகையில் மோகம் தீர்த்து வெண்மதியும் மறைந்துவிட்டான்....
காரிருள் மாய்த்து பேரொளி கொடுக்க கதிரவனும் வந்துவிட்டான்....
ஏனோ என் விழிகளுக்குள் வாழ்ந்திடும் என்னவளின் தரிசனம் இன்னும் காணாததேனோ.....
சில சூழ்நிலைகளை
கடக்க முடியாது
என எண்ணியே
எண்ணங்களுக்கு எதிர்மறையாய்
பல தூரம் கடந்து விடுகிறோம்...
அனுபவத்தின் முன் அனைவரும்
மௌனமாகி போகிறோம் ...